Monday, May 21, 2012

எமது நாடு . ..





எங்கள் நாடு இலங்கையதாம்
இந்து சமுத்திரம் மத்தியிலாம்
இந்திய நாட்டுக் கண்மையிலாம்
இலங்கும் எங்கள் தாய்நாடாம்

சிங்கள தமிழர் முஸ்லீம்கள்
சிறப்பாய் வாழும் நம்நாடு
மலை வளம் கொழிக்கும் எம்நாடு
மன்னர்கள் ஆண்டிட்ட நன்னாடு

அலைகடல் சூழ்ந்த எம் நாட்டில்
ஆறுகள் பாய்வதும் இன்னாட்டில்
தேயிலை ரப்பர் கொக்கோவும்
தெங்குப் பொருட்களும் இங்குண்டு

இயற்கை வளங்கள் நிறைந்திட்ட
இலங்கா புரியை போற்றிடுவோம்
வறுமை நாடாய் இல்லாமல்
வளம் கொளிக்கச் செய்திடுவோம்.

தரிசாய்க் கிடக்கும் நிலங்களையும்
தரமாய் விளைநிலமாக்கிடுங்கள்
உழைத்து வாழ்வதே உயர்வென்று
உயர்த்திப் பார்ப்போம் நம்நாட்டை . ..

மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.