Wednesday, May 9, 2012

இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டால்......





. .
இன்பமான இல்லாழ்வு வாழ வேண்டுமானால்.கணவன் மனைவி புரிந்துணர்வு
அவசியம் . . .அத்துடன் மிக மிக முக்கியமானது பணம் . .. பணம் இன்றேல் பிணம் தான் . . .என்று சொல்வார்களே . .. ஆமாம் அதில் எத்தனை உண்மை இருக்கிறது . . . .இப்போதெல்லாம் பணம் உள்ளவர்கள் தான் மதிக்கப் படுகிறார்கள் . . ..நேசிக்கப் படுகிறார்கள் . . .பணம் இன்றி வாழ முடியாத நிலை
உறவுகள் எல்லாம் சற்றுத்தொலைவில் தான் . . ..

எவ்வளவு தான் உழைத்துப் போட்டாலும் வருவாய்க்கு மேல் செலவாகத்தான்
இருக்கிறது , , ,உண்மைதான் . ..  கணவன் மனைவி இருவர் உழைத்தும் வருமானம் போதாத நிலை . வாழ்க்கைச் செலவு அதிகரித்து விட்டது , , நவ நாகரீக மோகம் தலைக்கு மேல் ஏறிவிட்டது . . ஒருவர் போல் மற்றவர் வாழ வேண்டும் என்ற ஆசை . .. இதனால் தீய வழியில் சம்பாதிப்பு . .. மனித தேவைகளைப் பூரர்த்தி செய்ய மனிதன் இயந்திரமாகின்றான் . . ஆயிரம் ரூபாய்
வருமான முள்ளவன் ஐயாயிரம் ரூபா செலவிருந்தால்.அவன் குடும்ப நிலை என்னாவது . . . கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை மிச்சப் படுத்த தெரிய வேண்டும் . . .இதில் கணவன் மனைவி இருவருமே கலந்து ஆலோசித்து
எதில் சிக்கனப் படுத்துவது எப்படி.ச் ேகரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . . . ..பிள்ளைகளுக்கும் இதை உணர்த்த வேண்டும் .  . .

நான் உழைகத்ததெல்லாம் ஊதாரியாக்குகிறாள் மனைவி என்றும் . . . .கணவன் சம்பாதிப்பதில் பாதிதான் வீடு வருகிறது  மீதியை கணவன் குடிததுத் தள்ளுகிறான் என்று மனைவியும் இருந்து விட்டால் . . .எப்படி வாழ்வில் முன்னேற முடியும் . . .

வாழ்க்கையில் முன்னோற குறிக்கோள் இருக்க வேண்டும் . . . .இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கட்டுக் கோப்பு வரையறை இருக்க வேண்டும்
முதல் மாதத்தில் கொஞ்சம் செலவாகி விட்டது என்றால் அடுத்த மாதத்தில்
தேவையற்ற செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் . . .
இப்போது இருக்கும் நிலையில் எதில் கட்டுப் படுத்துவது .....என்று கேட்கலாம் . . சாப்பாட்டிலா  . .உடையிலா பிள்ளைகளின் பாடசாலை செலவிலா . . ..
எதிலுமே சுருக்க முடியாத நிலை . .. . இதில் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை . .சங்கடம் தான் . . . .

பிள்ளைகளுக்கு சத்தான உணவு தாராளமாகக் கொடுக்கலாம் .குறைந்த விலையில் நிறைந்த உணவைக் கொடுக்கலாம் . .பிள்ளைகளுக்கு ஆடம்பர
வாழ்க்கையைக் காட்டாமல். .வரவு செலவுகளை வளர்ந்த பிள்ளைகளிடம்
பகிர்ந்து கொள்ளலாம் . . ..

புகைத்துத் தள்ளும் கணவன் .சூதாட்டத்தில் பணத்தை தொலைக்கும் ஒருவர்க்கம் . . . . சிற்றுண்டிச் சாலையில் கணக்கை ஏற்றி வைக்கும் கணவன் . .இவர்களின் வீண் செலவைக்குறைக்கலாமே . .. . வீட்டில் வீணே எரியும் மின்சாரம்.நீர் .தொலைபேசி. . . இவைகளை கட்டுப்படுத்தலாம் . . ..பெண்கள் வீட்டில் இருந்த படி தனக்குத் தெரிந்த கைத்தொழில் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் . . . .. .ஒரு பெண் ஒரு குடும்பத்தை சுபீட்சத்தின் இருப்பிடமாக கொண்டு வரலாம் . . .. . ஒருவனுடைய சுபீட்சத்தின் ஆணி வேர்
அவனுடைய மனைவியே . . .

உலகில் பணக்காரனாவதர்க்கும் பணக்காரனாய் வாழ்வதர்க்கும் .ஒரே வழி
பணத்தை ஊதாரித்தனம் செய்யாமல் . . .சிறுகச் சிறுகச் சேமித்து சீராக வாழலாம் . .. சேமிப்புப் ுழக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் . . .பிள்ளைகளுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . .இருப்பதில் திருப்தி கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும் . . ..

             
மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை . 

Tuesday, May 8, 2012

தூரமான வாழ்க்கை . . ..



காலைப் பரபரப்பு . ...
இயந்திர மான வாழ்க்கை
உழைக்க வேண்டும் என்ற வேட்கை
நாடுவிட்டு நாடுவந்து . . .
உறவுகளைப் பிரிந்து . .
உணர்வுகளைத் தொலைத்து . . .
எத்தனை நாட்களுக்கு   . .
இந்த தனிமை அவஸ்தை . . ..

அழகான நாடு  .. ..
அற்புதமான கலையம்சம் . .. .
தாரளமான உணவு . ..
உல்லாசமாய் இருந்தாலும்
மனமகிழ்வு இங்கில்லை. . .
எல்லாமே தூரமான நிலையில் .  ..

உறவுகளிள் திருமணங்கள் ..
சொந்தங்களின் சோக நிகழ்வுகள் .. . .
எல்லாவற்றிலும் இரவிரவாய் .. .
கண்விழுத்திருந்த நாட்கள் . . .இன்று
தொலைதூரம் இருந்து கொண்டு
தொலைபேசியில் இன்பதுன்பத்தை
இரு வரியில் உரையாடுவதில்
என்ன சுகம் இருக்கிறது . . . .

வாரத்தில் ஒரு நாள்
விடுமுறை கிடைத்தாலும்
எவ்வொரு நண்பனினதும்
வெவ்வேறு சோக நிகழ்வுகள்
சேர்ந்திருந்து எங்களை
நாங்களே தேற்றிக் கொள்கிறோம்..

உல்லாச வாழ்க்கை வாழ்வதாய்
ஊரிலுள்ளோர் நினைத்தாலும்
ஊர் வந்து சேரும்போது  ..
விடுதலை கிடைத்ததாய்
பூரித்துப் போகிறோம் . . .. .
உறவுகளின் முகங்களைக் கணடதும்
உயிர் பிழைத்ததாய் உணருகிறோம் . ..
இதயம் நொந்து கொள்கிறோம். . .. .


தூரமான வாழ்க்கை ........
என்றும் துயரம் தான் . . ..

மூதூர் சுஹைதா ஏ கரீம்...
வெள்ளவத்தையில் . இருந்து .

இவன். ... .



வாழ்க்கை என்றால் வரவு செலவில்ஒன்றில்லை
வளர் பிறையும் முடிவின்றி வருவதில்லை. . ..
சாதனைகள் தொடராக நிலைப்பதில்லை . . . . .
சாதி சன ஒற்றுமையும்  சத்தியமாய் நிலைப்பதில்லை .


உறவுகளுக்குள் ஓயாப் போராட்டம்
ஊடுருவிப் பார்த்தால் . ..
பொறாமையங்கே தலைவிரித்தாடும். . .
குன்று குழி நிறைந்தது தான் வாழ்க்கை
பெருங்குடி மகனாய் வாழ்வதென்றால்
வீழ்ந்து அதில் மீள வேண்டும் . . . . .

கவிஞன் என்றால் ஏழை என்பார் . . .
கற்பனையில் ஏவழயல்ல அவன் . .
வித்தகனாய் மாறுதற்கும் . .
முழு உலகம் பார்ப்பதற்கும் . ..
பஞ்சமில்லைா வார்த்தைகள்  . .
கற்பணையில் ஊற்றெடுக்கும் . . . . .

இருந்தும் அவனை வையம் வையும்
சொர்க்கத்தைக் காண்பவனும்
சொத்து சுகம் சேர்ப்பவனும்
தொலைந்து போன நினைவுகளை
தொடர் காவியமாய் தருபவனும்
உள்ளக் கிடக்கைகளை
உவமையுடன்.சேர்ப்பவனும்
கள்ள மில்லா உண்மையெலாம்
கட்சிதமாய் வடிவமைத்து
உணர்வுகளுடன் உறவாடி
உயிர்ப்பித்து அழகு பார்த்து
உணர்த்தசுபவன். . . . .இவன் ..

..................கவிஞன்.............

மூதூர் ......சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தையில்  இருந்து. . . . .



 

Monday, May 7, 2012

ஆறாத வடுக்கள் .........





பல இரவுகளில் தனிமை 
எனைத் தத்தெடுத்துக் கொள்கிறது . ...
கனவுகள் இல்லாத . . .
கடைசித் தூக்கத்தில் கூட . . .

நினைத்துப் பார்க்கிறேன்.
நெஞ்சு கனக்கிறது . . . 
ஏன் இவர்கள் . . .. . . 
இப்படி நடந்து கொண்டார்கள் . . .. .

எனக்கென யாருமில்லையென
அழுத போதெல்லாம் . . . .. 
ஆதரித்த அன்புள்ளங்கள்...
ஏன் எனை வஞ்சிக்கிறார்கள் . .. .

நனவுகளில் ஏற்பட்ட..
ஊமைக் காயங்களுக்கு..
கனவுகளில் தான் ...
மருந்திடப் பார்க்கிறேன் . . . ..

துயரங்களில் போது
ஏற்பட்ட தனிமையும் . . .
தனிமையின் போது
ஏற்பட்ட துயரமும் . . .

நினைத்துப் பார்க்கிறேன் . .
எனக்குள் தாழ் இட்டுக் கொள்கிறேன்....
பாவிகள் வாழ...
அப்பாவிகள் வீழ்கிறோம்,,,

ஏழைகள் எமக்கு ......
வெளிச்சம் போட...
சமூதாய நாவுக்குப் பயந்து
ஊமையாய் அழுகிறேன் . . .

இப்போது என்னிடம் 
மிச்சமிருப்ப தெல்லாம் . .
ஒழுங்கற்ற நினைவுகளும்
இரத்தம் சொட்டும் வார்த்தைகளும் தான் . . .

மூதூர்....சுஹைதா ஏ கரீம்






ஊண மனங்கள். . . .



வைத்தியர்கள் கடவுளுக்குச் சமம்
இறைவனுக்குச் சமம் .என்கிறோம்.
வைத்தியரை வாகை சூடுகிறோம்.
அந்த வைத்தியரிடமே பணம் .......
பேசப்படா விட்டால் . . ... . .
பிணமாகத்தான் திரும்புவோம்

சுஹைதா ஏ கரிம் .
வெள்ளவத்தை.