Wednesday, June 13, 2012

எதுவும் பேசாதே

எதுவும் பேசாதே
*****************



நீ நினைத்ததை முடிக்க
தீர்மாணித்து விட்டாய்
கொஞ்சம் கூட
 யோசிக்காமல்
உன் எண்ணம் 
உன் கால் 


பயனிப்பவன் நீ என்பதாலா
எதுவும் கேட்க வில்லை
சொல்லி விட்டேன்
இனியும் என்னிடம்
எதுவும் பேசாதே

உன் கனவு 
உன் வாழ்க்கை 
உணர்ந்து செயல் படு 
எனைச் சாராதே

உன் வருமானம் 
உன் அகிம்சா வாதம்
எதையும் என்னிடம்
விமர்சிக்காதே

உன் கூற்று உனக்கு 
சரி என்றால்
ஒன்றுக்கு பலதடவை
சிந்தித்து இருக்கலாம்

உனக்கு தெரியும்
 எத்தனை முறை
புத்தி புகட்டி இருப்பேன்
முன்னேற வழி காட்டியிருந்தேன்

எனை உதாசீனம் செய்து
எதில் முன்னேற்றம் 
கண்டாய் சொல்
எதையும் கேட்காமல்

இனியும் எதுவும் பேசாதே
என்றாவது ஒருநாள் 
எனை உணர்வாய் 
அன்று 
நானிருந்தால்.....

மீண்டும் வருவாய் 
என்னிடம்
ஆறுதலாய் வா 
ஆலோசனை தருகின்றேன்

இனியும் என்னிடம் 
எதுவும் வேசாதே
ஒன்றைப் புரிந்து கொள்
நீ 
முதிர்ந்த அறிவு செறிந்தவனாய் 
இருந்தபோதும்
ஆலோசனையில் 
அலட்சியம் வேண்டாம்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை






Tuesday, June 12, 2012

கனவு





இன்றும் பாதித்தூக்கத்தில்
துயில் எழும்புகிறேன்
அன்று பறிக்கப்பட்ட
எங்கள் உடமைகளும்
உணர்வுகளும் 
இன்றும் பாம்புகளாகி
கணவில் கூட 
கொத்துகிறது.

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.

வரம் ஒன்று வேண்டுகிறேன்


பிஞ்சி மொழி பேசி 
கொஞ்சி விளையாட
எனக்கு ஒரு வரம் வேண்டும்
இறைவா  அதை நீ தரவேண்டும்

பிஞ்சுக் காலால் நெஞ்சுதைத்து
பிளந்த வாயால் புன்னகை பூத்து
அள்ளி நானும் அணைத்திடவே
எனக்கு ஒரு வரம் வேண்டும்

மலடி என்றென்னை 
வையகத்தார் தூற்றாமல்
தயவுடனே வேண்டுகிறேன் 
தந்தருள்வாய் வரம் ஒன்று

அம்மா என்றழைத்திடவே 
அணைத்து நானும் மகிழ்ந்திடவே 
குறும்பாய் எனைக் கழைந்திடவே
குழந்தை வரம் தந்திடுவாய்

பள்ளி சென்று பயின்றிடவும்
பாரில் நலன் புரிந்திடவும்
இருகை யேந்தி வேண்டுகிறேன்
இறைவா எனக்கோர் வரம் தருவாய்

புகளுக்காக அல்லாமல் 
பிறர் தூற்றாதிருக்க வேண்டுமென
பத்துமாதம் சுமந்து பெற 
பகலிரவாய் வேண்டுகிறேன்

உன்னால் முடியாது ஏதுமில்லை 
என்னாறைவா
ஊர்டமத்தும் பழி கேட்டு 
என்னமாய்க் கொதிக்கிறது
 எனதுள்ளம்
அறிவாய் நீயே என்னிறைவா 
அன்பாய் எனக்கு அருள் புரிவாய்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை 


வாழ்க்கை



சின்னதாய ஒரு சந்தோஷம் 
சின்னதாய் ஒரு சஞ்சலம் 
சின்னதாய் ஒரு கோபம்
சின்னதாய் ஒரு விரக்தி
சின்னதாய் ஒரு கவலை
சின்னதாய் ஒரு எரிச்சல்

இத்தனையும் நாளுக்கு நாள்
இதயத்தில்
இட்களுக்கும் இன்னல்களுக்கும்
முகம் கொடுத்து 
மொத்தமாக சிரித்துக் கொள்கிறேன்
எனக்குள் .
நாளைய நாளின் 
நம்பிக்கையில் , , 

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை