Friday, June 8, 2012

கனவில் ஒருபிடி அள்ளி........




கானுகின்ற கனவினிலே 
எதுவும் வரலாம்
கழிப்பான கனவென்றாலும்
விழிப்பாக இருக்க வேண்டும்.

சலிப்பாக இருந்தாலும் 
செழிப்பாக நினைக்க வேண்டும்
பயமும் வரலாம்.பணமும் வரலாம்
பயமுறுத்தலும் வரலாம்

கனவினிலே எதுவும் வரலாம்
கனவு காணுங்கள் 
தூக்கத்தில் மட்டுமல்ல
விழிப்பிலும் காணுங்கள்.

இறுக மூடியிருந்த...
என் இரு விழிகளுக்குள்
நேற்றிரவு வந்த கனவு 
இது....அதில் வந்த சேதி இது

கனவுலகில் வாடுகின்ற
முதிர்க் கன்னியரின்கவலைகளை
நினைவுகளில் கோர்த்தெடுத்து
கண்ணீர்த் திவளை தீர்ப்பதர்க்கு
தின வெடுத்த தோள் எடுத்து
துணிந்து வரும் காளையர்க்கு
மண மகளாய் வாய்ப்பதர்க்கு -நல்ல
வேளை வரும் நாளை என்று
வந்து சொன்ன காளையை
 நான் தேடுகிறேன்,,

மீண்டும் கண்களை மூடுகின்றேன்
அவன் வரவை நாடுகின்றேன்

சொன்னவரின் வார்த்தைகளை
தொகுத்தெடுத்து யோசித்தேன்

வறுமையிலே வாடுகின்ற 
வடிவான குமரிகளை
பொறுமை மிகு குணவத்யை
பொன்னகையை நாடாமல்
புன்னகையைத் தேடிவரும்
கண்ணிறைந்த கணவனென
ஏழைக் குமரெல்லாம் போற்றுகின்ற
நல்ல தொரு எதிர்காலம்
நாளை வர வேண்டுமென
உள்ளத்தில் உள்ளதனை 
உணர்த்தபடி அவன் சென்றான்.

நேற்று நான் கணவில் கண்டவனை
நல்ல கல்புறுதி கொண்டவனை
இன்று ஓலைக்குடிசையிலே
ஒடுங்கி அழும் குமரியெல்லாம்
நனவினிலே கண்டு
மணமுடித்து மகிழ்வதர்க்கு
ஏகனவன் துணை புரிய 
இருகை யேந்துகிறேன்

இது போன்ற கனவுகளே 
இனி வரும் நாள் நினைவாக
எதிர்கால சந்ததிக்கு 
இதையெத்தி வையுங்கள்

கனவுலகில் வாழாமல்
கற்பனையில் மூழ்காமல்
மன உறுதி கொண்டவராய்
பணம் .உறுதி .கல்வீீடு
பொன் பொருளை நாடாமல்
மகர் கொடுத்து மணமுடிக்கும்
மனவுறுதி பெற்றிடுங்கள்

ஊரிலுள்ள காளையரில் 
ஓரிரு உள்ளங்கள் சிந்தித்தால்
உருப்படும் நம் சமூகம்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை





தேடுகிறேன்...............

இந்தக் கவிதை பொதிகைத் தொலைக்காட் சியில் வாசித்தேன்.
கவிஞர் வேலு வேந்தன் இதைப் பாராட்டினார்...........




தேடுகிறேன் .
சின்ன வயதில் சிரித்துப் பேசி
சிப்பி சிரட்டை விளையாடியது
சினம் கொள்ளாப் பாசமுடன் 
பழகிய 
நேச உள்ளங்களைத் தேடுகிறேன்

அமைதியாய்ப் புலரும் தாலைப் பொழுது
சஞ்சலமே இல்லாத மன அமைதி
சாதி மத பேதமில்லை எங்களுக்குள்
ஏற்ற  தாழ்வும் இருந்ததில்லை

நாட்டில் அமைதி இல்லை 
நிம்மதியாய் நித்திரை இல்லை
நித்தமும் கவலையுடன் 
நிம்மதியைத் தேடுகிறேன்.

நலிந்து போன மானிட வாழ்வில்
மானிடமே மரணித்துப் போய்
மலிந்து விட்ட ரீச்செயல்கள்
மறைந்து போகும் நாளைத் தேடுகிறேன்.

வஞ்சனை சூது கொலை களவு
காம இச்சை கயவர் கைவரிசை
நாசகாரச் செயல்கள் என்றும்
ஒழிந்து போகும் நாளைத் தேடுகிறேன்.

ஒற்றுமையான உறவுகள்
ஆபத்தில் உதவும் நன்பர்ள்
அல்லலின் போது அரவணைக்கும் கரங்கள்
அவனியில் உண்டா தேகிறேன்.

தொலைந்து போன .சமாதானம்
சாகடித்த சந்தோஷங்கள்
ஓடி மறைந்த ஒற்றுமைகள்
ஒன்றினைந்து நிலைத்திடுமா.

இனிவரும் காலத்தில் 
இழந்து விட்ட இன்பங்கள்
இனி வருமா தேடுகிறேன்.


மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை









அணர்த்தம் தந்த அலைகடலே




வாசலுடன் வந்து நீ எங்கள் 
பாசங்களை அல்லவா
பிரித்து விட்டாய்

அணர்த்தம் தந்தாய் 
அதில் ஆனந்தம் 
கண்டாய்

ரணங்களாய்ப் பிளிந்து

மனிதனைப் பிணங்களாய்
நடைப்பிணமாய்
நஞ்சூட்டப் பட்டவராய்
அனாதையாய்


அகதியாய் அனாதரவற்ற 
விதவையாய்
எத்தனை இழப்புகள்

ஏ கடலே 
உன்கரையில் நாங்கள் 
சிப்பிகளைப் பொறுக்கித்தானே
சேகரித்தோம்

ஆனால் நீ
தரையைத் தொட்டபோது
நாங்கள் 
உயிரற்ற உடலைத்தானே
பொறுக்கினோம்

ஏழைகளின் வாழ்வில் 
உயர்வை தந்த நீ
ஏன் ஆவேசம் கொண்டாய்

தொட்டுச் சென்ற சுனாமியே
நீ எடுத்துச் சென்றது போதுமே
பொறுக்கியது அத்தனையும் 
பொக்கிஷங்கள் அல்லவா

பாவம் அவர்கள் 
பாவப்பட்ட ஜீவன்கள்

அத்தனையும் ஒரு நொடியில்
ஒரே மூச்சில்
உன் பசிக்கு இரையாக்குவதுல்
என்ன சுகம் கண்டாய்

ஏ கடலே 
வேண்டாம் இன்னுமொரு 
கோரப்பசி உனக்கு
உன்னில் போராடித்தானே 
பலரது வாழ்க்கை உயர்வானது
ஆனால் நீயோ 
அனைவர் வாழ்விலும்
ஆட்டம் தந்து விட்டாயே

ஒரு நொடியில் 
ஒரே மூச்சில்
அனாதையாக்கப் பட்டு 
அகதியாக்கப்பட்டு
ஆடைகள் இன்றிப் போனதினால்
மானம் இழந்த ்க்கள் 
மயிரிழையில் உயிர் தப்பியும்
மன நோயாக்கப்கட்டு
எத்தனை இன்னல்கள் 


இறைவன் நாட்டம் 
இதுவே என்றால் 
இன்னுமோர் சுனாமி
இனியும் வேண்டாம்.


மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.























எதிர் பார்ப்பு





காலைப் பொழுது 
எப்போது விடியும்
விரக்தியின் விழிம்பில்
விரைந்து செல்கிறது 
வாழ்க்கை

யன்னல் கம்பிகளினூடே
என் பார்வை 
தொலைவை நோக்கியபடி
இரவையும் நிலவையும்
எத்தனை நாட்களுக்கு
ரசிப்பது


சில சமயம் வானுக்கு கூட
என் பார்வை
வெறுக்கிறதோ
வெண்ணிலவை 
கரு மேகத்தால் 
போர்த்திக் கொள்கிறது

என் சித்தியைப் போல
பாதையில் செல்பரை 
நான் பார்த்து விடுவேனோ
என்ற அச்சத்தில்
யன்னல் திரைச் சீலையை
மூட்விடுவது போல்

புது விடியலுக்காய்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்து போனேன் 
இல்லை...
எனை ஏமாற்றிக் கொண்டேன்

பருவ வயதை எட்டி
பலவருடம் போனபின்னும்
சீதனச் சந்தையில்
விலைபோக முடியாமல்
பலர் முன் காட்சிப் பொருளாய்
அலங்கரிக்கப் பட்டு 
அவமானப் பட்டு
இன்னும் முதிர்க் கன்னியாக
முடங்கிக் கிடக்கிறேன்.



மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை

குட்டிக் கவிதைகள்

கண்ணீர்த் துளி

இன்னும் என்னிடம்
மிஞ்சியிருப்பது
இதுமட்டுமே

உன் பிரிவின் பின்னால்


இரட்டை வேடம்
------------------------
மனிதர்களில் 
இவர்கள் தான்
மேலானவர்களாக
மதிக்கப் படுகிறார்கள்
பசுத்தோல் போர்த்திய
புலியாக..


முகமிழந்த முகவரி
********************
சுதந்திரம் கிடைத்த பின்னும்
முகமிழந்து
முகவரி தொலைத்தவர்களாய்
அகதி முகாம்களில்
அடங்கிக் கிடக்கிறோம்.


வயிற்றுப் பசி
***************
தெருவோரப் பிச்சைக் காரனுக்கும்
மாடி வீட்டுப் பணக்காரணுக்கும்
இறைவன் கொடுத்த தண்டணை
வயிற்றுப் பசி.


இளமை
********
நேற்றய நாளின்
தொலைந்து போன 
நிகழ்வுகள்..


நட்பு
******
ஹலோவுக்கு 
பின் 
காணாமல்
போனவர்கள்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.

அடுத்த வாரிசு

எண்ணை காணாத கேசம்
மெய்யை பொய்யாய்
மறைத்தபடி

சரிந்துவிழுந்த முந்தானையை
சரி செய்ய முயல்கிறாள்
சில தெருவோர
கழுகுகளின் பார்வையில்
இரையாகும் அவள் மேனி
உறைந்து போன
உணர்வுகள் புரியாமல்


பின்னால் சினுங்கிய படி
மூக்கிலிருந்து
வழிந்த நீரை
புறங்கையால் தேய்த்தபடி
அன்னையின் பின்னால்
அடியெடுத்து 
அவஸ்தைப் படும்
பால் முகம் மாறா 
பிள்ளை

தாய் கையேந்த 
தனயனின் பார்வையில்
அனாதையாய்
அன்னாந்து நோக்க..
அவன் கைகளுக்குள்ளும் 
சில்லறைகள் விழுகிறது

தலைமுறையாய் 
அவன் தொழிலுக்கும்
ஆரம்ப வித்தாகிறது..


மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை