Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, July 20, 2012

குட்டிக் கவிதைகள்.......





ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
நிறை குறைவாக.

          ( படித்த கவிதை.)



முதுமை
-------------
                   எழுத ஆசை இருக்கு
              பேனாவில்
மை இல்லை.


         இளமை
        ------------
     பேனாவில் மை இருக்கு
       எழுத ஆசை இல்லை.

      கண்ணாடி
----------------
   முதிர்க் கன்னியின்
        முக்கய காதலன்.

          பத்திரிகை
         ----------------
சிரிக்கவும்
    சிந்திக்கவும்
      அதிர்ச்சியடையவும்
      அவமானப் படுத்தவும்
வெள்ளைக் காகிதத்தின் 
    மகரந்தச் சேரக்கை.


     கவிதை
    -------------
    கவிதை சொல்லச் சொன்னான் 
          நான் 
                அவன் பெயரை உச்சரித்தேன்..

எனது கவிதையின் 
முதல் வரி நீதான் 
     மொத்தக் கவியும்
             ஒரே வரிதான்.

    கடைத்தெரு.
       -------------------
அன்று கடைத்தெரு
        இன்று காடைத் தெரு.

பூ  
---
     பள்ளி அறையில்
    கசக்கப் படுவதாலா
         உன்னை பெண்ணுக்கு 
       ஒப்பிடுகிறார்கள்.

                                சுஹைதா ஏ கரீம்.
       


Friday, June 8, 2012

குட்டிக் கவிதைகள்

கண்ணீர்த் துளி

இன்னும் என்னிடம்
மிஞ்சியிருப்பது
இதுமட்டுமே

உன் பிரிவின் பின்னால்


இரட்டை வேடம்
------------------------
மனிதர்களில் 
இவர்கள் தான்
மேலானவர்களாக
மதிக்கப் படுகிறார்கள்
பசுத்தோல் போர்த்திய
புலியாக..


முகமிழந்த முகவரி
********************
சுதந்திரம் கிடைத்த பின்னும்
முகமிழந்து
முகவரி தொலைத்தவர்களாய்
அகதி முகாம்களில்
அடங்கிக் கிடக்கிறோம்.


வயிற்றுப் பசி
***************
தெருவோரப் பிச்சைக் காரனுக்கும்
மாடி வீட்டுப் பணக்காரணுக்கும்
இறைவன் கொடுத்த தண்டணை
வயிற்றுப் பசி.


இளமை
********
நேற்றய நாளின்
தொலைந்து போன 
நிகழ்வுகள்..


நட்பு
******
ஹலோவுக்கு 
பின் 
காணாமல்
போனவர்கள்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.