Saturday, November 3, 2012

கறுப்புக்கல்



தியாக ஆடைகளில்
அந்தரங்கங்களாப் பேசிய நீ

வெள்ளாடைகளோடு 
விருந்திளராய் அழைத்து
ஹாஜிகளை குழந்தையாய் 
பார்த்த கஃபாவுக்குள்

உன் அச்சரத்துக்குள்
தியாக மை ஊற்றிக் கிடக்கிறது

தூரத்து முஸ்லீம் எல்லாம்
திரண்டு வந்து என்று சேர்ந்து
கறுப்பன் வெள்ளையன் என
பாகுபாடு ஏதுமிலா
கவலையுடன் கல்புருகி
கையேந்த தியாக உணர்வை
நெஞ்சுருக நினைத்துப் பார்க்க
வந்த ஹஜ்ஜே


படைத்தவனை நம்பி 
பாலைவனத்தினிலே
தாய் மகவை வைத்து விட்டுச்
சென்ற தோர் தியாகம் 
தாகம் தீர்க்க தண்ணீர் தேடிய
அன்னை ஹாஜராவின்
பாதங்களைப் பஞ்சாக்கினாய்

கறுப்புக் கல்லாய் நின்று
இப்றாஹிம் நபியின் 
உள்ளத்திற்கு கபனிட்ட வேளை
தியாகமே நீ எழுந்து நின்றாய்.

இஸ்மாயீலைக் குழந்தையாக்கி
இப்றாஹீம் எண்ணத்தை சோதித்தாய்

எல்லைகளைக் கடந்து
இறுகப் பிணைப்புடன்
ஏழை பணக்காரன் என்ற 
பாகுபாடு ஏதுமில்லா
ஆசைகளைத் துறந்து
இரக்கத்தை வலியுறுத்தி
கட்டளைகளை நிறைவேற்ற 
கற்றுத் தந்த பாடம்.

உலக மையத்தில் 
அடிக்கப்பட்ட ஆண்யே
அறபா மைதானத்தில்
எந்தப் பாதமும்
வெந்ததாய் சரித்திரம் இல்லை.
ஒரு வரி கூட 
யாரும் எழுதவும் இல்லை.

உன்னில் வேகப்பந்து 
அருள் மாரி சொரிய முன்
எங்கள் கண்களும்
தெரு மாரி பொழிந்து
அடங்கவில்லை.

அண்ணலாரின் கால்கள்
ஆர்த்தரித்த  பூமியே
உனது ஒவ்வொரு மண்ணும்
தியாகத் துகள்கள் தான்.


                           மூதூர்    சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை.





No comments:

Post a Comment