Thursday, May 17, 2012

திடீரென வரும் விருந்தாளிகளை உபசரித்தல்





திடீரென உங்கள் வீட்டிற்கு சொல்லாமல் விருந்தினர் வந்து விட்டால் . . .முதலில் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலி , தொலைக்காட்சியின் சப்தங்களை நிறுத்துங்கள் . . .. ..அவர்களை அன்பாக அழைத்து உட்கார வைத்து 
அருகமர்ந்து சுகநலம் விசாரியுங்கள். அவர்கள் வந்திருக்கும் நேரம் பார்த்து 
குளிர்பானமோ  அல்லது சூடாகவோ பருகக் கொடுங்கள் . . . . . .அத்துடன் அந்த
நேரத்தில் இருக்கும் உணவுப் பண்டங்கள் கொடுத்து உபசரியுங்கள் . . . அறைக்குள் இருந்து அட்டகாசப் படுத்தும் குழந்தைகளை அடக்கி அமைதிப் படுத்தி விடுங்கள் . . . .அமைதியாகப் பேசுங்கள் .....நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சங்கடப் படுத்த விடாதீர்கள் ...பேசும் போது அவர்கள் பேசுவதைக் கேழுங்கள் ..உங்கள் வீட்டுக் கதைகளையும் உங்கள் பிள்ளைகளையும் பெருமைப் படுத்தி பேசிக் கொண்டிருக்காதீர்கள்......
உங்கள் இரு வீட்டாரின் கதையை விட
மூன்றாமவரின் கதையை பேச எடுக்காதீர்கள்..இப்போதெல்லாம் .இருவர் . . .  . . சேர்ந்தால் வீட்டுக் கதையை விட தொலைக்காட்சி நாடகங்கள்தான் . . .  . . . . . . . . பேசப்படுகிறது..உங்கள் பிள்ளைகளின் குறைகளை பிள்ளைகளை முன் . . . . . . . . .. வைத்து க்கொண்டு  சொல்லாதீர்கள் பிள்ளைகளை கேலிக்கைக்கு . . . . . . . . . . . . .  ..ஆளாக்காதீர்கள்        .அடிக்கடி நேரத்தைப் பார்க்காதீர்கள்...நீங்கள் பேசும். . . . .. . போது உங்கள் பேச்சிற்கு செவி மடுக்கிறார்களா என்று அவதானித்துப்.  . . . . . .  பேசுங்கள் . . சத்தமிட்டுப் பேசாதீர்கள் . .சத்தமாக சிரிக்காதீர்கள் . .பேச்சில் நிதானம் தவறாமல் பேசுங்கள்... .  .சொல்லாமல் வந்ததினால் சில அசெளகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம் அதை அவர்களிடம்  எடுத்துச் சொல்லுங்கள் .......திடீரென வந்ததினால் நன்கு கவனிக்கப் படாததை  சொல்லுங்கள்...இன்னொரு முறை வாருங்கள் என்று அன்புக்கட்டளை இடுங்கள்.....

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தையில் இருந்து
.

Wednesday, May 16, 2012

முதிர்ந்தும் முதிராத . . . . . . . .



நாங்கள் மூப்பெய்தி விட்டோம்.
அதனால் . ......
அனாதையாக்கப் பட்டோம்.
எங்கள் ஆசைகள் 
தேவைகள் எல்லாமே.......................
அடக்கு முறைக்குள்....
பேசா மடந்தையாக. . . . . . . . . .  ......
மொளனித்துப் போகின்றோம்
பாதுகாப்பு  பிள்ளைகள்
..... என்பதால்.......


பெற்ற பிள்ளையுடனும்
பேரக் குஞ்சுகளுடனும்
கொஞ்சி விளையாட ..
ஆசைதான் எங்களுக்கும்
ஆனால் வீட்டில்
அனாதையாக்கப்பட்டோம்


மூன்று நேர உணவும் உடையும்
தாராளமாக கிடைத்தாலும்
முதியோர் இல்லங்களில் ............
முடங்கிக் கிடக்கின்றோம்.


இறந்த காலத்தை இரைமீட்டி
பிள்ளைகளின் ....
உயர்வு கண்டு.பூரித்து நிற்கின்றோம்
எங்களுக்குள்ளும்
ஆசைகள் தேவைகள்
எல்லாமே நிறைந்து கிடக்கிறது


சின்னஞ் சிறார்கள் போல
அன்பிற்காய் ஏங்கும்
அனாதைகள் நாங்கள்
இன்று 
முதிர்ந்தும் முதியாதவர்களாக
அனாதை இல்லங்களில்
பிள்ளைகளின் நலனுக்காய் 
பிராத்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை......

கனவு

அந்த தெருவோரப்  பிச்சைக்காரனும்
பணக்காரன்
சொப்பணக்காரன்

Sunday, May 13, 2012

காத்திருப்பு...



எத்தனை இரவுகள்
ஏங்கி ஏங்கி விழித்திருப்பேன்
இரவின் நிசப்த அமைதியில்
என் இதயத்தின் ஓசை மட்டும்
ஓங்கி ஒலித்த நாட்கள்...
எனக்காகவா நான் வாழ்ந்தேன்...?


இப்போ...எதற்காக நான் வாழ்கிறேன்
புரியாமல் தடுமாறுகிறேன்
விதி என்ற இரு வரியை
நொந்து கொள்வதெப்படி...?

கலையும்,கற்பும் கை தவறி போகாமல்
கனத்த பொறுமையுடன்
புன்னகை பூத்தவளாய்
புவியில் உலாவி வந்தேன்
என்னை புரிந்தவர்கள் எத்தனை பேர்...?

ம்...புரிந்தவரே,பிரிவானபோது
பூ நான் என்ன செய்வேன்..?
இதயத்தில் இடம் பிடித்தவனை
இடைமறித்து பறித்தெடுத்தார்
படித்துவிட்டு தந்து விடு
பாசம் என்ன பட்டறையா...?

என்னவனே..?
நீ உன் நினைவுகளை மட்டும்
எனக்குள் நூதனசாலையாக்கிவிட்டு
இன்னோர் இதயத்தில் குடியிருப்பது
என்ன ஞாயமோ..?நானறியேன்...?
நியாயமானது என
உன் மனது துடிக்கும் போது
உணர்ந்து கொள்வாய் என் அன்பை
அதுவரை,
என் காத்திருப்பு நிலைத்திருக்கும்....!

-மூதூர் சுஹைதா. ஏ. கரீம்-