Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, May 17, 2012

திடீரென வரும் விருந்தாளிகளை உபசரித்தல்





திடீரென உங்கள் வீட்டிற்கு சொல்லாமல் விருந்தினர் வந்து விட்டால் . . .முதலில் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலி , தொலைக்காட்சியின் சப்தங்களை நிறுத்துங்கள் . . .. ..அவர்களை அன்பாக அழைத்து உட்கார வைத்து 
அருகமர்ந்து சுகநலம் விசாரியுங்கள். அவர்கள் வந்திருக்கும் நேரம் பார்த்து 
குளிர்பானமோ  அல்லது சூடாகவோ பருகக் கொடுங்கள் . . . . . .அத்துடன் அந்த
நேரத்தில் இருக்கும் உணவுப் பண்டங்கள் கொடுத்து உபசரியுங்கள் . . . அறைக்குள் இருந்து அட்டகாசப் படுத்தும் குழந்தைகளை அடக்கி அமைதிப் படுத்தி விடுங்கள் . . . .அமைதியாகப் பேசுங்கள் .....நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சங்கடப் படுத்த விடாதீர்கள் ...பேசும் போது அவர்கள் பேசுவதைக் கேழுங்கள் ..உங்கள் வீட்டுக் கதைகளையும் உங்கள் பிள்ளைகளையும் பெருமைப் படுத்தி பேசிக் கொண்டிருக்காதீர்கள்......
உங்கள் இரு வீட்டாரின் கதையை விட
மூன்றாமவரின் கதையை பேச எடுக்காதீர்கள்..இப்போதெல்லாம் .இருவர் . . .  . . சேர்ந்தால் வீட்டுக் கதையை விட தொலைக்காட்சி நாடகங்கள்தான் . . .  . . . . . . . . பேசப்படுகிறது..உங்கள் பிள்ளைகளின் குறைகளை பிள்ளைகளை முன் . . . . . . . . .. வைத்து க்கொண்டு  சொல்லாதீர்கள் பிள்ளைகளை கேலிக்கைக்கு . . . . . . . . . . . . .  ..ஆளாக்காதீர்கள்        .அடிக்கடி நேரத்தைப் பார்க்காதீர்கள்...நீங்கள் பேசும். . . . .. . போது உங்கள் பேச்சிற்கு செவி மடுக்கிறார்களா என்று அவதானித்துப்.  . . . . . .  பேசுங்கள் . . சத்தமிட்டுப் பேசாதீர்கள் . .சத்தமாக சிரிக்காதீர்கள் . .பேச்சில் நிதானம் தவறாமல் பேசுங்கள்... .  .சொல்லாமல் வந்ததினால் சில அசெளகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம் அதை அவர்களிடம்  எடுத்துச் சொல்லுங்கள் .......திடீரென வந்ததினால் நன்கு கவனிக்கப் படாததை  சொல்லுங்கள்...இன்னொரு முறை வாருங்கள் என்று அன்புக்கட்டளை இடுங்கள்.....

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தையில் இருந்து
.