நாங்கள் மூப்பெய்தி விட்டோம்.
அதனால் . ......
அனாதையாக்கப் பட்டோம்.
எங்கள் ஆசைகள்
தேவைகள் எல்லாமே.......................
அடக்கு முறைக்குள்....
பேசா மடந்தையாக. . . . . . . . . . ......
மொளனித்துப் போகின்றோம்
பாதுகாப்பு பிள்ளைகள்
..... என்பதால்.......
பெற்ற பிள்ளையுடனும்
பேரக் குஞ்சுகளுடனும்
கொஞ்சி விளையாட ..
ஆசைதான் எங்களுக்கும்
ஆனால் வீட்டில்
அனாதையாக்கப்பட்டோம்
மூன்று நேர உணவும் உடையும்
தாராளமாக கிடைத்தாலும்
முதியோர் இல்லங்களில் ............
முடங்கிக் கிடக்கின்றோம்.
இறந்த காலத்தை இரைமீட்டி
பிள்ளைகளின் ....
உயர்வு கண்டு.பூரித்து நிற்கின்றோம்
எங்களுக்குள்ளும்
ஆசைகள் தேவைகள்
எல்லாமே நிறைந்து கிடக்கிறது
சின்னஞ் சிறார்கள் போல
அன்பிற்காய் ஏங்கும்
அனாதைகள் நாங்கள்
இன்று
முதிர்ந்தும் முதியாதவர்களாக
அனாதை இல்லங்களில்
பிள்ளைகளின் நலனுக்காய்
பிராத்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை......
No comments:
Post a Comment