Friday, July 20, 2012

குட்டிக் கவிதைகள்.......





ரேசன் கடைக்காரனுக்கு
குழந்தை பிறந்தது
நிறை குறைவாக.

          ( படித்த கவிதை.)



முதுமை
-------------
                   எழுத ஆசை இருக்கு
              பேனாவில்
மை இல்லை.


         இளமை
        ------------
     பேனாவில் மை இருக்கு
       எழுத ஆசை இல்லை.

      கண்ணாடி
----------------
   முதிர்க் கன்னியின்
        முக்கய காதலன்.

          பத்திரிகை
         ----------------
சிரிக்கவும்
    சிந்திக்கவும்
      அதிர்ச்சியடையவும்
      அவமானப் படுத்தவும்
வெள்ளைக் காகிதத்தின் 
    மகரந்தச் சேரக்கை.


     கவிதை
    -------------
    கவிதை சொல்லச் சொன்னான் 
          நான் 
                அவன் பெயரை உச்சரித்தேன்..

எனது கவிதையின் 
முதல் வரி நீதான் 
     மொத்தக் கவியும்
             ஒரே வரிதான்.

    கடைத்தெரு.
       -------------------
அன்று கடைத்தெரு
        இன்று காடைத் தெரு.

பூ  
---
     பள்ளி அறையில்
    கசக்கப் படுவதாலா
         உன்னை பெண்ணுக்கு 
       ஒப்பிடுகிறார்கள்.

                                சுஹைதா ஏ கரீம்.
       


1 comment: