Wednesday, June 13, 2012

எதுவும் பேசாதே

எதுவும் பேசாதே
*****************



நீ நினைத்ததை முடிக்க
தீர்மாணித்து விட்டாய்
கொஞ்சம் கூட
 யோசிக்காமல்
உன் எண்ணம் 
உன் கால் 


பயனிப்பவன் நீ என்பதாலா
எதுவும் கேட்க வில்லை
சொல்லி விட்டேன்
இனியும் என்னிடம்
எதுவும் பேசாதே

உன் கனவு 
உன் வாழ்க்கை 
உணர்ந்து செயல் படு 
எனைச் சாராதே

உன் வருமானம் 
உன் அகிம்சா வாதம்
எதையும் என்னிடம்
விமர்சிக்காதே

உன் கூற்று உனக்கு 
சரி என்றால்
ஒன்றுக்கு பலதடவை
சிந்தித்து இருக்கலாம்

உனக்கு தெரியும்
 எத்தனை முறை
புத்தி புகட்டி இருப்பேன்
முன்னேற வழி காட்டியிருந்தேன்

எனை உதாசீனம் செய்து
எதில் முன்னேற்றம் 
கண்டாய் சொல்
எதையும் கேட்காமல்

இனியும் எதுவும் பேசாதே
என்றாவது ஒருநாள் 
எனை உணர்வாய் 
அன்று 
நானிருந்தால்.....

மீண்டும் வருவாய் 
என்னிடம்
ஆறுதலாய் வா 
ஆலோசனை தருகின்றேன்

இனியும் என்னிடம் 
எதுவும் வேசாதே
ஒன்றைப் புரிந்து கொள்
நீ 
முதிர்ந்த அறிவு செறிந்தவனாய் 
இருந்தபோதும்
ஆலோசனையில் 
அலட்சியம் வேண்டாம்

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தை






2 comments:

  1. எளிமையான வரிகள்!
    எதார்த்த வார்த்தைகள்!

    ReplyDelete