Monday, May 21, 2012

எமது நாடு . ..





எங்கள் நாடு இலங்கையதாம்
இந்து சமுத்திரம் மத்தியிலாம்
இந்திய நாட்டுக் கண்மையிலாம்
இலங்கும் எங்கள் தாய்நாடாம்

சிங்கள தமிழர் முஸ்லீம்கள்
சிறப்பாய் வாழும் நம்நாடு
மலை வளம் கொழிக்கும் எம்நாடு
மன்னர்கள் ஆண்டிட்ட நன்னாடு

அலைகடல் சூழ்ந்த எம் நாட்டில்
ஆறுகள் பாய்வதும் இன்னாட்டில்
தேயிலை ரப்பர் கொக்கோவும்
தெங்குப் பொருட்களும் இங்குண்டு

இயற்கை வளங்கள் நிறைந்திட்ட
இலங்கா புரியை போற்றிடுவோம்
வறுமை நாடாய் இல்லாமல்
வளம் கொளிக்கச் செய்திடுவோம்.

தரிசாய்க் கிடக்கும் நிலங்களையும்
தரமாய் விளைநிலமாக்கிடுங்கள்
உழைத்து வாழ்வதே உயர்வென்று
உயர்த்திப் பார்ப்போம் நம்நாட்டை . ..

மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை.


Thursday, May 17, 2012

திடீரென வரும் விருந்தாளிகளை உபசரித்தல்





திடீரென உங்கள் வீட்டிற்கு சொல்லாமல் விருந்தினர் வந்து விட்டால் . . .முதலில் இயங்கிக் கொண்டிருக்கும் வானொலி , தொலைக்காட்சியின் சப்தங்களை நிறுத்துங்கள் . . .. ..அவர்களை அன்பாக அழைத்து உட்கார வைத்து 
அருகமர்ந்து சுகநலம் விசாரியுங்கள். அவர்கள் வந்திருக்கும் நேரம் பார்த்து 
குளிர்பானமோ  அல்லது சூடாகவோ பருகக் கொடுங்கள் . . . . . .அத்துடன் அந்த
நேரத்தில் இருக்கும் உணவுப் பண்டங்கள் கொடுத்து உபசரியுங்கள் . . . அறைக்குள் இருந்து அட்டகாசப் படுத்தும் குழந்தைகளை அடக்கி அமைதிப் படுத்தி விடுங்கள் . . . .அமைதியாகப் பேசுங்கள் .....நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சங்கடப் படுத்த விடாதீர்கள் ...பேசும் போது அவர்கள் பேசுவதைக் கேழுங்கள் ..உங்கள் வீட்டுக் கதைகளையும் உங்கள் பிள்ளைகளையும் பெருமைப் படுத்தி பேசிக் கொண்டிருக்காதீர்கள்......
உங்கள் இரு வீட்டாரின் கதையை விட
மூன்றாமவரின் கதையை பேச எடுக்காதீர்கள்..இப்போதெல்லாம் .இருவர் . . .  . . சேர்ந்தால் வீட்டுக் கதையை விட தொலைக்காட்சி நாடகங்கள்தான் . . .  . . . . . . . . பேசப்படுகிறது..உங்கள் பிள்ளைகளின் குறைகளை பிள்ளைகளை முன் . . . . . . . . .. வைத்து க்கொண்டு  சொல்லாதீர்கள் பிள்ளைகளை கேலிக்கைக்கு . . . . . . . . . . . . .  ..ஆளாக்காதீர்கள்        .அடிக்கடி நேரத்தைப் பார்க்காதீர்கள்...நீங்கள் பேசும். . . . .. . போது உங்கள் பேச்சிற்கு செவி மடுக்கிறார்களா என்று அவதானித்துப்.  . . . . . .  பேசுங்கள் . . சத்தமிட்டுப் பேசாதீர்கள் . .சத்தமாக சிரிக்காதீர்கள் . .பேச்சில் நிதானம் தவறாமல் பேசுங்கள்... .  .சொல்லாமல் வந்ததினால் சில அசெளகரியங்கள் ஏற்பட்டிருக்கலாம் அதை அவர்களிடம்  எடுத்துச் சொல்லுங்கள் .......திடீரென வந்ததினால் நன்கு கவனிக்கப் படாததை  சொல்லுங்கள்...இன்னொரு முறை வாருங்கள் என்று அன்புக்கட்டளை இடுங்கள்.....

மூதூர் சுஹைதா ஏ கரீம் 
வெள்ளவத்தையில் இருந்து
.

Wednesday, May 16, 2012

முதிர்ந்தும் முதிராத . . . . . . . .



நாங்கள் மூப்பெய்தி விட்டோம்.
அதனால் . ......
அனாதையாக்கப் பட்டோம்.
எங்கள் ஆசைகள் 
தேவைகள் எல்லாமே.......................
அடக்கு முறைக்குள்....
பேசா மடந்தையாக. . . . . . . . . .  ......
மொளனித்துப் போகின்றோம்
பாதுகாப்பு  பிள்ளைகள்
..... என்பதால்.......


பெற்ற பிள்ளையுடனும்
பேரக் குஞ்சுகளுடனும்
கொஞ்சி விளையாட ..
ஆசைதான் எங்களுக்கும்
ஆனால் வீட்டில்
அனாதையாக்கப்பட்டோம்


மூன்று நேர உணவும் உடையும்
தாராளமாக கிடைத்தாலும்
முதியோர் இல்லங்களில் ............
முடங்கிக் கிடக்கின்றோம்.


இறந்த காலத்தை இரைமீட்டி
பிள்ளைகளின் ....
உயர்வு கண்டு.பூரித்து நிற்கின்றோம்
எங்களுக்குள்ளும்
ஆசைகள் தேவைகள்
எல்லாமே நிறைந்து கிடக்கிறது


சின்னஞ் சிறார்கள் போல
அன்பிற்காய் ஏங்கும்
அனாதைகள் நாங்கள்
இன்று 
முதிர்ந்தும் முதியாதவர்களாக
அனாதை இல்லங்களில்
பிள்ளைகளின் நலனுக்காய் 
பிராத்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை......

கனவு

அந்த தெருவோரப்  பிச்சைக்காரனும்
பணக்காரன்
சொப்பணக்காரன்

Sunday, May 13, 2012

காத்திருப்பு...



எத்தனை இரவுகள்
ஏங்கி ஏங்கி விழித்திருப்பேன்
இரவின் நிசப்த அமைதியில்
என் இதயத்தின் ஓசை மட்டும்
ஓங்கி ஒலித்த நாட்கள்...
எனக்காகவா நான் வாழ்ந்தேன்...?


இப்போ...எதற்காக நான் வாழ்கிறேன்
புரியாமல் தடுமாறுகிறேன்
விதி என்ற இரு வரியை
நொந்து கொள்வதெப்படி...?

கலையும்,கற்பும் கை தவறி போகாமல்
கனத்த பொறுமையுடன்
புன்னகை பூத்தவளாய்
புவியில் உலாவி வந்தேன்
என்னை புரிந்தவர்கள் எத்தனை பேர்...?

ம்...புரிந்தவரே,பிரிவானபோது
பூ நான் என்ன செய்வேன்..?
இதயத்தில் இடம் பிடித்தவனை
இடைமறித்து பறித்தெடுத்தார்
படித்துவிட்டு தந்து விடு
பாசம் என்ன பட்டறையா...?

என்னவனே..?
நீ உன் நினைவுகளை மட்டும்
எனக்குள் நூதனசாலையாக்கிவிட்டு
இன்னோர் இதயத்தில் குடியிருப்பது
என்ன ஞாயமோ..?நானறியேன்...?
நியாயமானது என
உன் மனது துடிக்கும் போது
உணர்ந்து கொள்வாய் என் அன்பை
அதுவரை,
என் காத்திருப்பு நிலைத்திருக்கும்....!

-மூதூர் சுஹைதா. ஏ. கரீம்-


Wednesday, May 9, 2012

இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டால்......





. .
இன்பமான இல்லாழ்வு வாழ வேண்டுமானால்.கணவன் மனைவி புரிந்துணர்வு
அவசியம் . . .அத்துடன் மிக மிக முக்கியமானது பணம் . .. பணம் இன்றேல் பிணம் தான் . . .என்று சொல்வார்களே . .. ஆமாம் அதில் எத்தனை உண்மை இருக்கிறது . . . .இப்போதெல்லாம் பணம் உள்ளவர்கள் தான் மதிக்கப் படுகிறார்கள் . . ..நேசிக்கப் படுகிறார்கள் . . .பணம் இன்றி வாழ முடியாத நிலை
உறவுகள் எல்லாம் சற்றுத்தொலைவில் தான் . . ..

எவ்வளவு தான் உழைத்துப் போட்டாலும் வருவாய்க்கு மேல் செலவாகத்தான்
இருக்கிறது , , ,உண்மைதான் . ..  கணவன் மனைவி இருவர் உழைத்தும் வருமானம் போதாத நிலை . வாழ்க்கைச் செலவு அதிகரித்து விட்டது , , நவ நாகரீக மோகம் தலைக்கு மேல் ஏறிவிட்டது . . ஒருவர் போல் மற்றவர் வாழ வேண்டும் என்ற ஆசை . .. இதனால் தீய வழியில் சம்பாதிப்பு . .. மனித தேவைகளைப் பூரர்த்தி செய்ய மனிதன் இயந்திரமாகின்றான் . . ஆயிரம் ரூபாய்
வருமான முள்ளவன் ஐயாயிரம் ரூபா செலவிருந்தால்.அவன் குடும்ப நிலை என்னாவது . . . கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை மிச்சப் படுத்த தெரிய வேண்டும் . . .இதில் கணவன் மனைவி இருவருமே கலந்து ஆலோசித்து
எதில் சிக்கனப் படுத்துவது எப்படி.ச் ேகரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . . . ..பிள்ளைகளுக்கும் இதை உணர்த்த வேண்டும் .  . .

நான் உழைகத்ததெல்லாம் ஊதாரியாக்குகிறாள் மனைவி என்றும் . . . .கணவன் சம்பாதிப்பதில் பாதிதான் வீடு வருகிறது  மீதியை கணவன் குடிததுத் தள்ளுகிறான் என்று மனைவியும் இருந்து விட்டால் . . .எப்படி வாழ்வில் முன்னேற முடியும் . . .

வாழ்க்கையில் முன்னோற குறிக்கோள் இருக்க வேண்டும் . . . .இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு கட்டுக் கோப்பு வரையறை இருக்க வேண்டும்
முதல் மாதத்தில் கொஞ்சம் செலவாகி விட்டது என்றால் அடுத்த மாதத்தில்
தேவையற்ற செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் . . .
இப்போது இருக்கும் நிலையில் எதில் கட்டுப் படுத்துவது .....என்று கேட்கலாம் . . சாப்பாட்டிலா  . .உடையிலா பிள்ளைகளின் பாடசாலை செலவிலா . . ..
எதிலுமே சுருக்க முடியாத நிலை . .. . இதில் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை . .சங்கடம் தான் . . . .

பிள்ளைகளுக்கு சத்தான உணவு தாராளமாகக் கொடுக்கலாம் .குறைந்த விலையில் நிறைந்த உணவைக் கொடுக்கலாம் . .பிள்ளைகளுக்கு ஆடம்பர
வாழ்க்கையைக் காட்டாமல். .வரவு செலவுகளை வளர்ந்த பிள்ளைகளிடம்
பகிர்ந்து கொள்ளலாம் . . ..

புகைத்துத் தள்ளும் கணவன் .சூதாட்டத்தில் பணத்தை தொலைக்கும் ஒருவர்க்கம் . . . . சிற்றுண்டிச் சாலையில் கணக்கை ஏற்றி வைக்கும் கணவன் . .இவர்களின் வீண் செலவைக்குறைக்கலாமே . .. . வீட்டில் வீணே எரியும் மின்சாரம்.நீர் .தொலைபேசி. . . இவைகளை கட்டுப்படுத்தலாம் . . ..பெண்கள் வீட்டில் இருந்த படி தனக்குத் தெரிந்த கைத்தொழில் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் . . . .. .ஒரு பெண் ஒரு குடும்பத்தை சுபீட்சத்தின் இருப்பிடமாக கொண்டு வரலாம் . . .. . ஒருவனுடைய சுபீட்சத்தின் ஆணி வேர்
அவனுடைய மனைவியே . . .

உலகில் பணக்காரனாவதர்க்கும் பணக்காரனாய் வாழ்வதர்க்கும் .ஒரே வழி
பணத்தை ஊதாரித்தனம் செய்யாமல் . . .சிறுகச் சிறுகச் சேமித்து சீராக வாழலாம் . .. சேமிப்புப் ுழக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் . . .பிள்ளைகளுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . .இருப்பதில் திருப்தி கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும் . . ..

             
மூதூர் சுஹைதா ஏ கரீம்.
வெள்ளவத்தை . 

Tuesday, May 8, 2012

தூரமான வாழ்க்கை . . ..



காலைப் பரபரப்பு . ...
இயந்திர மான வாழ்க்கை
உழைக்க வேண்டும் என்ற வேட்கை
நாடுவிட்டு நாடுவந்து . . .
உறவுகளைப் பிரிந்து . .
உணர்வுகளைத் தொலைத்து . . .
எத்தனை நாட்களுக்கு   . .
இந்த தனிமை அவஸ்தை . . ..

அழகான நாடு  .. ..
அற்புதமான கலையம்சம் . .. .
தாரளமான உணவு . ..
உல்லாசமாய் இருந்தாலும்
மனமகிழ்வு இங்கில்லை. . .
எல்லாமே தூரமான நிலையில் .  ..

உறவுகளிள் திருமணங்கள் ..
சொந்தங்களின் சோக நிகழ்வுகள் .. . .
எல்லாவற்றிலும் இரவிரவாய் .. .
கண்விழுத்திருந்த நாட்கள் . . .இன்று
தொலைதூரம் இருந்து கொண்டு
தொலைபேசியில் இன்பதுன்பத்தை
இரு வரியில் உரையாடுவதில்
என்ன சுகம் இருக்கிறது . . . .

வாரத்தில் ஒரு நாள்
விடுமுறை கிடைத்தாலும்
எவ்வொரு நண்பனினதும்
வெவ்வேறு சோக நிகழ்வுகள்
சேர்ந்திருந்து எங்களை
நாங்களே தேற்றிக் கொள்கிறோம்..

உல்லாச வாழ்க்கை வாழ்வதாய்
ஊரிலுள்ளோர் நினைத்தாலும்
ஊர் வந்து சேரும்போது  ..
விடுதலை கிடைத்ததாய்
பூரித்துப் போகிறோம் . . .. .
உறவுகளின் முகங்களைக் கணடதும்
உயிர் பிழைத்ததாய் உணருகிறோம் . ..
இதயம் நொந்து கொள்கிறோம். . .. .


தூரமான வாழ்க்கை ........
என்றும் துயரம் தான் . . ..

மூதூர் சுஹைதா ஏ கரீம்...
வெள்ளவத்தையில் . இருந்து .