பிஞ்சி மொழி பேசி
கொஞ்சி விளையாட
எனக்கு ஒரு வரம் வேண்டும்
இறைவா அதை நீ தரவேண்டும்
பிஞ்சுக் காலால் நெஞ்சுதைத்து
பிளந்த வாயால் புன்னகை பூத்து
அள்ளி நானும் அணைத்திடவே
எனக்கு ஒரு வரம் வேண்டும்
மலடி என்றென்னை
வையகத்தார் தூற்றாமல்
தயவுடனே வேண்டுகிறேன்
தந்தருள்வாய் வரம் ஒன்று
அம்மா என்றழைத்திடவே
அணைத்து நானும் மகிழ்ந்திடவே
குறும்பாய் எனைக் கழைந்திடவே
குழந்தை வரம் தந்திடுவாய்
பள்ளி சென்று பயின்றிடவும்
பாரில் நலன் புரிந்திடவும்
இருகை யேந்தி வேண்டுகிறேன்
இறைவா எனக்கோர் வரம் தருவாய்
புகளுக்காக அல்லாமல்
பிறர் தூற்றாதிருக்க வேண்டுமென
பத்துமாதம் சுமந்து பெற
பகலிரவாய் வேண்டுகிறேன்
உன்னால் முடியாது ஏதுமில்லை
என்னாறைவா
ஊர்டமத்தும் பழி கேட்டு
என்னமாய்க் கொதிக்கிறது
எனதுள்ளம்
அறிவாய் நீயே என்னிறைவா
அன்பாய் எனக்கு அருள் புரிவாய்
மூதூர் சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை

.jpg)
.jpg)
.jpg)

